Thursday, June 17, 2010

சுயம் இழந்த தேவதைகள்...















அவிழ்த்து விடுங்கள்
வெள்ளைத் தேவதையின் கருப்புக் கட்டை
எங்கேனும் சென்று ஓடி ஒளியட்டும்...

இல்லையேல் எடுத்துவிடுங்கள்
கையின் தராசை
நிலை சாய்ந்துவிட்ட முட் கம்பியால்
குத்திக்கொள்ளும் தற்கொலையாவது
தடுக்கப்படட்டும்

இத்தனை நாள் பொறுத்து, நீதிக்குத்தான்
நெருப்பு வைத்தோம்
பாவம் தேவதைக்கும் வேண்டாம்...

சுயநல அரக்கர்கள் மத்தியில்
சுயம் இழந்த தேவதைகள் ஏராளம்

இரக்கமற்ற தீர்ப்புகளை எழுதிவிட்டு
ஒடிவது பேனா முள் மட்டுமல்ல
நீதியின் நாடியும் தான்...

இங்கே நியாயங்கள் உறங்குவதில்லை
தட்டி எழுப்ப...
உறங்குவது போல் பாசாங்கு செய்கிறது

வேண்டுமென்றே தவறான
இலக்கு சுட்ட சரியான குறி?!...

என்ன சொல்லி என்ன?..
செய்தித்தாள் மடிக்கும் முன்னமே
மறப்பது நம் வாடிக்கை

நாளையும் தொடரும் இதே வேடிக்கை.....

No comments: