Sunday, February 6, 2011

யுகம் யுகமாய்....

சின்னஞ்சிறு சிரிப்புதிர்க்கும்

உன் உதட்டுப் பிளவுகளில்

புதைந்து போகிறேன் நான்

உன் கருவிழிச் சிறையில் சிக்கி

காணாமலே போகிறேன்

விடுதலை மறந்து

உன் சுட்டு விரல் தீண்டலில்

பனியாய் உறைந்து

சுண்டு விரல் தொடுதலில்

நுரையாய் கரைகிறேன்

என் உயிர் குடிக்கும்

உன் ஓரப் பார்வையில்

எகிறும் என் இதயத் துடிப்பு

அன்று நீ பேசி உதிர்த்த வார்த்தைகளில்

இன்றும் பன்னீர்ப்பூ வாசனை

நாள் ஒன்று கூடி வர வருடம் நான்கு

தவமிருக்கும் மாதம் போல

என்னுள் உனக்கான தவங்கள்

யுகம் யுகமாய்

சிற்பமாக இருந்த என்னை

சிரிக்க வைத்து சிலிர்க்க வைத்து

மீண்டும் பாறையாக்கிப் போய்விடாதே...

No comments: