Sunday, February 27, 2011

குறுங்கவிதைக‌ள்...

1.

இது பழைய கிணறு
நீ பழகிய கிணறு
உன் நினைவுக் கற்கள் வீசப்படும்போது
மட்டும் சற்றே சலனம்....

2.
நீல வானில் மட்டுமல்ல‌
கருங்குளத்திலும் நட்சத்திரங்கள்
அல்லி...

3.
மேகம் துளைத்து மறைந்த‌
மின்னல் போல‌
என் மனதை துளைத்துவிட்டு
எங்கே சென்றாய்...

4.
இலையுதிர்க்கும் காற்றில்
பூ எதிர்பார்க்கும்
வழிப்போக்கனும் மறந்துபோன‌
உன் நினைவுச் சுமைதாங்கி நான்...

5.
தனிமை

இனிமையானது தான்
நம்மைத் தின்காதவரை...

No comments: