Sunday, February 27, 2011

அழகிய நாட்களும் அழியாத சோகமும்...
















கை விரித்து கடலளவு
எனைப் பிடிக்கும் என்றாய்
உனக்குத் தெரியுமோ தெரியாதோ
என் கையகல இதயத்தின் கற்பனையளவு
எனக்குனைப் பிடிக்கும் என்பது..

கடலுக்கு உண்டு கற்பனைக்கேது
அளவுகோலும் எல்லைக் கோடும்?..

கண்ணயர்ந்த நொடிப் பொழுதில்
வரம் கேட்ட கடவுள் போல்
வந்தே மறைந்து போய்விட்டாய்..








காத்திருந்த காலமெல்லாம்
சேர்த்து வைத்த கண்ணீரோடு
இன்று தவறவிட்ட நொடி முதலாய்
செந்நீரும் கரிக்கிறதே...

உன்னால் என் உயிரில்
விழுந்த முடிச்சுகள்
இறுகாமல் இன்னமும் இளகாமல்...

அழகிய நாட்களையும்
அழியாத சோகத்தையும்
ஒரு சேரக் கொடுத்தவனே

நாம் பழகிய நாட்களின் உச்சம்
இன்று உயிர் வலி மட்டுமே மிச்சம்....

No comments: