Tuesday, April 5, 2011

குறுங்கவிதைக‌ள்...

"என் பழைய பக்கங்களில் இருந்து"

1. வீடு...

வளைத்து வளைத்து சேர்த்துப் பின்னி

அழகாகத்தான் கட்டுகிறாய்

அடித்து அடித்துக் கலைத்தாலும்

மீண்டும் மீண்டும் உன் வீட்டை

என் வீட்டில் ஒட்டடையாக.....


2. 500 ரூபாய் நோட்டு....

காந்தியே...

இன்னும் ஏழையைச் சேராமல்

உனக்குமா ஏளனச் சிரிப்பு?!...


3.வெய்யில்...

சற்றே வெயில் அதிகம் தான்

வியர்த்துத்தான் போகிறது

ஐஸ் வாட்டர் பாட்டிலுக்கும்...


4.சிகரெட்...

அவள் இடை

என் இரு விரல்களுக்கு இடையில்

எங்கள் 18 வருட தாம்பத்தியத்தில்

பிறந்தது கேன்சர் குழந்தை...


5.தன் மானம்...

இறக்கும் போதும்

இரக்க விருப்பமில்லை

வாய்க்கரிசி போடாதே....

No comments: