Friday, April 29, 2011

ஆதலால் தவிர்க்காதே......


நீ இழுத்துவிடும் மூச்சிலிருந்தும்
உன் சின்னக் கண் துடிப்பிலிருந்தும்
உன் உதட்டுச் சுழிப்பிலிருந்துமே
என் கவிதைக்கான வார்த்தைகளைக்
கண்டு கொண்டுவிடுகிறேன்...

எழுதிய வரிகள் உன்னால் வாசிக்கப் படுகையில்
பிரத்தியேக வாசனை தாங்கி
கவிதையாக உதிர்கின்றது...

எத்தனையோ வரிகள் சேர்த்து நான்
முட்டி மோதி எழுதிய போதும்
உன் ஒரு நொடி ஓரப் பார்வை
எனைத் தீண்டிச் சிந்திச் செல்லும்
வார்த்தைகளுக்கு ஈடாவதேயில்லை...

நாம் சந்திக்கும் பொழுதுகளில்
உனைப் பார்ப்பதை விட
படிப்பதுதான் இயல்பாக நடக்கின்றது...

தொடுதல்கள் காட்டிலும்
தொலைவிருந்தாலும் உன் சுவாசம்
ஸ்பரிசிப்பதே சுவாரசியமாகிவிடுகிறது...

எனக்கு எப்போதும் சுவாரசியமான
கவிதைகள் எழுதவே பிடிக்கிறது
ஆதலால் தவிர்க்காதே......

No comments: