Sunday, May 8, 2011

நீ வருவாயென...

பனி மலைக்குள் ஒரு எரி மலை
என்னுள் உன் காதல்..
பூவுக்குள் ஒரு பூகம்பம்
என் நெஞ்சில் உன் துடிப்பு..

எண்ணெயும் இல்லை
திரியும் இல்லை ஆனாலும்
எனை விளக்காக்கி எரிக்கின்றது
உன் நினைவு....
உன் கனவுத் தீக்கள் சுட்டே
புகைகிறது என் இரவு....

என் கவிதைப் புத்தகத்தில்
ஏதோ ஒரு பக்கத்தில்
நீ தொலைகிறாய்
புரட்ட மனம் இல்லை
முதல் பக்கத்திலேயே
ஒட்டிக் கொள்கிறது விரல்கள்.

உனக்காய் இயற்றிய கவிதைகள்
இன்னமும் எழுதப் படாமல்...
விழிகள் உன் வழிகளையே
நோக்கியிருக்கிறது
என்றேனும் மரணம் போல்
நிச்சயம் நீ வருவாயென.....

No comments: