Wednesday, June 8, 2011

மலர்ந்தும் விரியும் பூ....

உனைத் தீண்டாமல் எனைக் கடக்கும்
தென்றலும் கசப்பாய்த்தான் வீசுகிறது

திறந்த வெளியிலும் மூச்சு முட்டுகிறது
உன் நினைவுச் சுமையால்
நெஞ்சில் அழுத்தம்..

வயல் வெளியில் வைக்கோல் பொம்மை போல்
தனித்தே இருக்கிறேன்
சினேகமநற்று புன்னகையற்று...




வாழ்க்கை மிகவும் குரூரமானது
அது நாம் பேசிய நிமிடங்களை
கரைத்துவிட்டது
பிரிந்த நொடிகளை கல்லாக்கிவிட்டது

உதிர்ந்துவிட்ட உன் உறவை மறக்க
கல்லறைக்குள் வாழ்கின்றேன் நான்
ஓட்டில் சுருங்கிய ஆமை போல்
உடல் குறுகிப் போனாலும்
உள்ளம் மட்டும் உன் நினைவால்
குழைகிறது....







மலர்ந்தும் விரியும் பூப்போல....

No comments: