Wednesday, July 20, 2011

காதலொழித்து....



















குளக்கரையில் அமர்ந்து கொண்டு
நிலவெனத் தெரியும் உன்
பிம்பத்தில் கல்லெரிகின்றேன்
கலைத்துவிட எண்ணி...
குளத்திலும் உடையவில்லை
வானிலும் கலையவிலலை...

நெஞ்சினுள் எரியும் உன்
நினைவுத் தீ அணைக்க
உலர்ந்துவிட்ட நம் உறவினை
மொத்தாமாய் தூக்கி எறிகின்றேன்


அத்தனையும் இரையாக்கிக் கொண்டு
முன்னிலும் அதிகமாய்
கொழுந்துவிட்டு எரிகின்றாய்...

மூளை அடுக்குகளில் வெண் மேகமென
படிந்திருக்கும் உன்னை
ஊதித் துரத்திவிட விழைகிறேன்...
நீயோ கார் மேகமென
காதல் பொழிந்து
எல்லா நாளங்களிலும்
பிரவாகமாய் பரவுகின்றாய்...

எத்தனை முயன்றாலும்
உன் ஒற்றைச் சிரிப்பால்
என் முயற்சிகளனைத்தயும்
வீனாக்கி விடுகின்றாய்...

இன்று ஒட்டுமொத்த
நிராகரிப்பால்
என் கவிதைகளனைத்தையும்
விதவையாக்கிப் போகின்றாய்...

No comments: