Sunday, August 14, 2011

கதை சொல்லி...









காக்காய் வடை சுட்ட கதை
சிங்கராஜாவை முயல் அழித்த கதை
குரங்கும் குல்லாக் காரானும் கதை
க்ருஷ்ணனும் காளிங்கனும் கதை

அத்தனைக் கதைகளையும்
குழந்தைகள்
அரங்கத்தினுள் ஆன்ட்டி
சொல்லிக் கேட்டுக் கொண்டிருக்க

வெளியில் 1000 ரூபாய்
கட்டிய பெருமையில்
அம்மாவும் அப்பாவும்

கதை கேட்க ஆளில்லா
வெறுமையில்
முதியோர் இல்லங்களில்...
தாத்தாவும் பாட்டியும்

No comments: