Monday, October 10, 2011

கர்வம் பூசிய....










உனக்கென பிறந்தேன் இல்லை

உனக்கென வளர்ந்தேன் இல்லை

உனக்கென வாழ்வதுவும் இல்லை

ஆனால்

உனக்கென நொடிகளை செலவிட்டு

உனக்கான வரிகளைச் சேமிக்கிறேன்

வார்த்தைகளின் இடைவெளியை

உன் நினைவு கொண்டு நிரப்புகிறேன்

நிழல் நேரங்களின் நினைவுப் பதிவுகளை

காகிதப் பதியமாக்கிப் பொக்கிஷமாய்

பொத்தி வைத்துப் பார்க்கிறேன்

காமம் கலக்காத காதலின்

உடைந்த துகள்களை இன்னமும்

ஈர்த்துக் கொண்டிருக்கும் கர்வம் பூசிய

உன் நினைவலைக் காந்தங்கள்....

2 comments:

dafodil's valley said...

u said yr affection indirectly in a gentle way. so touching also. thnx for sharing like a wonderful poem to us.

SOS said...

Thanks Vasu.