Saturday, October 29, 2011

சொந்த வீட்டின் அகதிகள்....


















சொந்த வீட்டின் அகதிகளாய்
சுயம் இழந்து சுகம் துறந்து

முட்கம்பி வேலி நடுவே
முட்கள் கீறிய ரோஜாக்களாய்

பசுமை போர்த்திய பூமியின்
வறண்ட நிலத்தில்

உதிர்ந்து கொண்டுதான் உள்ளது
இன்னமும்

எதிர்பார்த்து ஏமாறும்
ஏக்க இதயங்கள்

தண்ணீருக்கு ஆசைப்பட்ட‌
உப்புக் கற்களாய்...

No comments: