Thursday, November 3, 2011

மழைக்காட்டில்....













பூவாய் வருஷிக்கும் மழை
உடல் சூட்டை தொட்டுச் செல்லும்
குளிர்த்தென்றல்
அங்கங்கே முளைத்திருக்கும்
திடீர்க் குளங்கள்...

மொத்தமும் உள்வாங்கி
மழை கழுவிய கருந்தார்ச் சாலையில்
வெண்பாதம் பதிய‌
மென்மையாய் நடக்க ஆசைதான்...

உடல் ஒட்டும் ஆடையின் வசீகரம்
ஆபாசக் கண்களில் வக்கிரமாகி
பெண்களும் உறுத்திடும் வேளையில்...

சட்டென்று ஓட்டுக்குள்
ஒ(து)டுங்கித்தான் போனேன்
மானசீகமாய் மழைக்காட்டில்
தொலைந்து கொண்டே.....

3 comments:

dafodil's valley said...

அந்த மெல்லிய மழைக்கம்பி அழகிய வரிகளூடே என்னையும் நனைத்துவிட்டாய்... நானும் உன்னுடன் சேர்ந்து மழையை மகிழ்ந்தேன். நன்றி ஹேமா...!

Shakthiprabha (Prabha Sridhar) said...

அற்புதமா எழுதறீங்க sos. நான் படித்த ஒவ்வொரு கவிதையும் ரசித்தேன்.
நிறைய எழுதுங்க. தொடர்ந்து எழுதுங்க.
வலைச்சரத்தில் இப்பதிவை இணைத்திருக்கிறேன். நன்றி :)

கீழிருக்கும் சுட்டி வலைச்சரத்தில் இணைத்த பதிவுக்கானது

http://blogintamil.blogspot.com/2011/12/blog-post_22.html

SOS said...

நன்றி சக்திப்ரபா, தங்கள் வருகைக்கும் ரசித்த பின்னூட்டத்துக்கும். தாங்கள் கொடுத்திருந்த வலை தளத்தில் என் பக்கத்தையும் கொண்டு வந்தமைக்கு மிக நன்றி.