Thursday, January 5, 2012

வசந்தம் தப்பி....













வசந்தம் தப்பி மொட்டு விட்டது
என் தோட்டத்து மரம்
காலம் கடந்து ஏற்பட்ட
காதல் போல...

பற்றற்ற...
சதைப் பற்றற்ற காதல்
வசந்தம் கடந்துதான் மலர்கிறது...

எந்தச் ஸ்ருதியிலும் சேர்வதில்லை
வண்டியோட்டியின் வாய்ப்பாட்டு
நம் பிரியத்தைப் போல...

உனைக் கடந்துவிட்டதாய்
எக்களிக்கிறது மனம்
கடைசி வரை உன் நினைவுகளால்
துரத்தப்படப் போவதை அறியாமல்...

நிலவு மட்டும் விழித்திருக்கும்
நிசிக்கு துணையாக என் விழிகளும்
உன் திசை தேடியபடி...

No comments: