Monday, January 23, 2012

என் கவிதைகளின் கதை...













தனிமை தின்று கொண்டிருக்கும்
நிசிப் பொழுதில்

அரவமற்ற நாழிகையில்
ஆரவாரத்தோடு ஒவ்வொன்றாக

சறுக்கி வெளியேறுகின்றன
என் மன ஏட்டின்
எழுத்துகள் யாவும்

வழியில் ஒன்றுக்கொன்று
முட்டி மோதி முந்தி
முண்டியடித்து நகர்கின்றன

சில உன் வாசல் அடையும் முன்பே
உயிர் விட்டு விடுகின்றன

சில உன் படுக்கையின் முன்பு
படுகாயமடைந்து
மயக்கமுற்று விடுகின்றன

உன் மீதேறி உன் இதயம்
தொட்டுத் திரும்பி
எனைச் சேர்ந்த
எழுத்துக்கள் மட்டும்

சப்தமில்லாமல் நுழைந்து
எனது பக்கங்களில்
கவிதைகளாக பதிந்துவிடுகின்றன...

No comments: