Saturday, March 31, 2012
வெற்றுப் படகு...
தனிமையிலே இனிமை கண்டு
வெள்ளி நிலவின் வெளிச்சத்திலே
நீல நதியை தழுவிச் சென்று
யோக நிலையை எட்டியிருந்ததது
படகில் இருந்த என் மனது...
சட்டென்ற அதிர்வில் படகின் குலுக்கலில்
தடுமாறி இடம் மாறி
கட்டுக் கடங்கா கோபத்துடன்
சகட்டு மேனிக்கு வசவுச் சொற்களை
நுனி நாக்கு வரை உற்பத்தி செய்து
பொங்கி எழுந்த கோபப் பிழம்பு
ஆயாசமாய் அடங்கியது...
வெளிப்படுத்தாத அவ்வார்த்தைகள்
அயர்ச்சியின் உச்சத்தில்
மன அழுத்தம் கூட்டி விட்டு
தன்னைக் கழித்துக் கொண்டது
சுழித்துச் சென்ற நீரலையில்
இடித்துச் சென்ற
வெற்றுப் படகைப் போல...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment