Saturday, June 9, 2012

புத்தன்...



















குளிர் நடுக்கிய இரவொன்றில்
புத்தன் சிலை எரித்து
நெருப்பு மூட்டிக் கொண்டிருந்தவனிடம்
அதிர்ச்சியுடன் கேட்டேன்
என்ன செய்து கொண்டிருக்கிறாய் என
அவன் நிதானமாகச் சொன்னான்
புற புத்தனை எரித்துக் கொண்டிருக்கிறேன்
என் அக புத்தனை காத்துக் கொள்ள..

No comments: