Friday, June 1, 2012

விட்டுச் சென்றவை...













பெரு மனதுடன்
எனக்காகவே எத்தனையோ
விட்டுச் சென்றாய்
உனக்காக சிலவற்றை மட்டும்
எடுத்துக் கொண்டு

நிலவைப் பரித்துக் கொண்டு
வானத்தை விட்டுச் சென்றாய்

ஈரத்தை உரிஞ்சிக் கொண்டு
மேகத்தை விட்டுச் சென்றாய்

சுவாசத்தைத் திருடிக் கொண்டு
காற்றை விட்டுச் சென்றாய்

பார்வையை பிடுங்கிக் கொண்டு
கண்களை விட்டுச் சென்றாய்

வேர்களை வெட்டி கொண்டு
கிளைகளை விட்டுச் சென்றாய்

நினைவுகளை எடுத்துக் கொண்டு
தனிமையை விட்டுச் சென்றாய்

நீ விட்டுச் சென்றது இப்படி எத்தனையோ
என்னையும் சேர்த்து
உன்னைத் தவிர.....

No comments: