Saturday, June 9, 2012

காத்திருக்கிறேன்...













நீ காதோடு செய்த சத்தம்
காதலோடு தந்த முத்தம்
என் நெஞ்சோடு செய்யும் யுத்தம்
உன் நினைவோடு நித்தம் நித்தம்

என் மூக்குத்தி ஸ்பரிசங்களை
நீ மூக்கால் உணரும் போதெல்லாம்
மூர்ச்சையாகிப் போகின்றது
நான் முடிந்து வைத்த
வார்த்தைகள் எல்லாம்

பாதைகள் தூரம் தான்
பயணங்கள் நீளம் தான்
உன் நினைவு நிழலாய்
தொடரும் மட்டும்
குறுகும் சாலை மாயம் தான்

கனவுகள் தின்று
நினைவுகள் மென்று
காத்திருக்கிறேன்
காதலில் கொஞ்சம் காதலோடு கொஞ்சம்...

1 comment:

சிவஹரி said...

மௌனத்தின் சப்தங்களின் மர்ம முடிச்சு இங்கே தான் தத்தம் பாதையைக் காட்டுகின்றதோ என்று எண்ணிடத் தோன்றுகின்றது.


நன்றி