Saturday, February 23, 2013

சொல்வதற்கு ஒன்றும் இல்லை..



விரிந்த நதியில்
சென்று கொண்டிருந்த என்னை
இழுத்துச் சுழற்றிவிட்டாய்...

தனித்து ஓடத்தில்
சென்று கொண்டே இருக்கிறேன்
கரையில்லாத நீர்ப்பரப்பில்
கானல் நீரான உனை நோக்கி...

உன் நாவால் தீர்மானிக்கப்படும்
சொல்லாக எனை ஆக்கியபின்
நீ அறிந்திருக்க வாய்ப்பில்லை
என் பேசாத சொற்களின் ங்களை.

அதிகாலைப் பூவின் பரிசுத்தம் போல
உன் மீதான அன்பு
மலர்ந்து கொண்டே இருக்கிறது
பிடித்தலும் பிடிக்காமல் இருத்தலுமான
இரு முரண்களின் நடுவே...

பல சமயங்களில் மிகக் கவனமாக
என் மீது படரும்
வெறுமையாகிவிடுகிறாய்...

இரவின் குளிருடன் உனக்காக
சேமிதிருந்த சில மௌனங்களும்
இரங்கிக் கொண்டே இருக்கின்றன
ஒளி மறைந்த இருளுக்குள்
உனைத் தேடியபடியே...

No comments: