Thursday, May 15, 2014

நிலா நிலா ஓடிவா...

தனக்கு ஊட்டிய சாதத்தை
அம்மாவுக்குத் தெரியாமல்
தன் பொம்மைக்கும் ஊட்டியது
குழந்தை..

குழந்தை தன் பொம்மைக்கு
ஊட்டும் போது மட்டும்
தரை இறங்குகிறாள்
நிலாப் பெண்.. 

1 comment:

வை.கோபாலகிருஷ்ணன் said...

நிலாப்பெண்ணையே தரை இறங்கச்செய்த குட்டிக்குழந்தை நிலா ரஸிக்க வைக்கிறாள். பாராட்டுக்கள்.