Wednesday, October 28, 2015

மறக்க முடியாத மே 2014.


மே மாதம் 2014 மறக்க முடியாத மகிழ்வான தருணங்களைக் கொடுத்தது. இம்  மாதத்தில் தான் எனது கவிதை முதன் முதலாகபுத்தகத்தில் அச்சேறியது. மல்லிகை மகள் மாத இதழில். அச்சேற்றிய மல்லிகை மகள்  இதழ் ஆசிரியர்
 திரு. சிவஞானம் சாருக்கு எனது மகிழ்வான நன்றிகள்.





இதே மாதத்தில் மீண்டுமொரு ஆச்சரியம். முன்னனி வார இதழான குமுதத்திலும்(28.05.2014 தேதியிட்ட) குழந்தைகளைப் பற்றி எழுதிய கவிதைகள் பிரசுரமாகின. 
பிரசுரித்த குமுதம் இதழ் ஆசிரியர் திரு. ப்ரியாகல்யாணராமன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.





2 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

நம் படைப்பு ஒன்று முதன் முதலாக ஓர் பிரபல பத்திரிகையில் அச்சிடப்பட்டு நம் பெயருடன் வெளியிடப்படுவதை நாம் பார்க்கும்போது ஏற்படும் ஆனந்தம் / மகிழ்ச்சி சொல்லில் எடுத்துரைக்க முடியாததுதான். இந்த சந்தோஷத்தை அனுபவித்துப் பார்த்தவர்களாலேயே உணர முடியும். இதை நான் நன்கு உணர்கிறேன்.

மனம் நிறைந்த பாராட்டுக்கள். மேலும் மேலும் தாங்கள் எழுத்துலகில் ஜொலிக்க என் அன்பான நல்வாழ்த்துகள் + ஆசிகள்.

SOS said...

அடடா!!! அடித்த உடனேயே படித்துப் பாராட்டும் மனம்.. வை.கோ சார் மிகவும் நெகிழ்கிறேன். கூடவே குற்ற உணர்வும். தங்கள் பதிவுகளை தொடர்ந்து பார்வையிட முடியவில்லையே என. மன்னிக்கவும் ப்ளீஸ். (ம்.. பாருங்கள் ஒன்றரை ஆண்டுக்குமுன்னால் பிரசுரமான கவிதைகளை இன்றுதான் பகிர்கிறேன். என் சுறுசுறுப்பு அப்படி) தங்கள் ஆசி என்றும் வேண்டும் சார். மிக்க நன்றி.