Thursday, February 11, 2016

வெள்ளம் புகுந்த வீடு...

இத்தனை நாட்களாக
தன் அம்மாவை
பூனை குட்டி வளர்க்கலாம்மா..
நாய் குட்டி வளர்கலாம்மா
மீன்குட்டியாவது வளர்கலாமேம்மா..
என நச்சரித்துக் கொண்டே இருந்த
சிறுவனுக்கு
மிகுந்த மகிழ்ச்சி
வெள்ளத்தில் அடித்து வந்து
ஒதுங்கிய அத்தனையும்
அவனது மாடி அறையிலும்

மடியிலும் பாதுகாப்பாய்…

1 comment:

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகவும் அழகான ஆக்கம். யதார்த்தமாகவும் உள்ளது. பாராட்டுகள்.